இறைவனுக்கு நாம் ஏதேனும் மாபெரும் விடயம் செய்ய கருதினால், நாம் நமது கனவுகளை இழக்க விடாமல் காக்க நினைத்தால், நாம் அதன் சாத்தியத்தை கைப்பற்ற வேண்டும். நாம் திடம் கொள்ள வேண்டும். நம்மை தாக்கும் சோதிக்கும் சூழல்கள் உருவாகும் பொழுது, வீரம் கொள்ளும் ஆவியை பெற்று எதிர்கொள்ளும் ஆற்றலை வேண்டி மன்றாட வேண்டும். பயம் கொள்ளாமல் திடம் கொண்டிருக்கும் வரை அச்சம் என்பது நமக்கு ஒரு குழப்பமே இல்லை!
அச்சத்தின் ஆவியானது நம்மை முன்னேறி செல்ல விடமால் தடுக்கும். நூற்றாண்டுகளாக, எதிரியானவன் அச்சத்தை கைக்கொண்டு மக்களை தடுத்தான். ஆகவே, அவன் தனது உத்தியை கண்டிப்பாய் நிறுத்தப் போவதில்லை. ஆயினும், இறைவனுக்கு நன்றி. நாம் அச்சத்தை வீழ்த்த முடியும். 37 ஆயினும், நம்மேல் அன்பு கூர்ந்தவரின் செயலால் மேற்கூறியவை அனைத்திலும் நாம் வெற்றிமேல் வெற்றி அடைகிறோம். (உரோமையர் 8:37). துணிவு என்பது அச்சம் இல்லை உள்ள ஒரு நிலை இல்லை. மாறாக, அச்சம் இருக்கும் நிலையில் நம்மை அல்லது ஒரு சூழலாகும். நீங்கள் அச்சம் கொள்ளும் பொழுது, இறைவனிடம் உங்களை திடப்படுத்தவும், அவர் உங்களை நேர் வழியில் திடப்படுத்தி முன்னெடுத்து செல்வார் என்பதை அறிந்து முன்னேறுங்கள்.
நன்றியின் மன்றாட்டு
ஆண்டவராகிய இறைவா, துணிவின் கொடைக்காக உமக்கு நன்றி நவில்கிறோம். எனக்கு கனவுகள் அளிப்பதற்காகவும், அதை செயல்படுத்திட எனக்கு ஆற்றல் அளிப்பதற்க்காகவும் நன்றி. என் இதயத்தில் நீர் வைத்திட்ட கனவுகளை நான் காய் விடாமல் நிறைவேற்ற நான் தேர்ந்து கொள்கிறேன்.
இப்படிக்கு,
பணி ஓய்வு பெற்ற அருட்பணி.தந்தை.அகத்தின் வோங்
Church of the Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to share the Good News of the Kingdom of God to everyone.